Thursday, March 13, 2025
Google search engine
HomeIndiaதேர்வு எழுத சென்ற மாணவனின் விரல்கள் துண்டிப்பு: தூத்துக்குடியில் சம்பவம்!

தேர்வு எழுத சென்ற மாணவனின் விரல்கள் துண்டிப்பு: தூத்துக்குடியில் சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுத சென்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனின் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், கபடி போட்டி ஒன்றில்,உயர்சாதியை சேர்ந்த அணியை தோற்கடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த அணியை சேர்ந்த 3 பேர், பட்டியல் சமூக மாணவனின் கையில் 3 விரல்களை வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக மாணவனின் குடும்பத்தினர் கூறியுள்னர். ஆனாலும் தற்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் உயர்சாதியை சேந்த ஒரு பெண்ணுடன் காதலில் இருந்து தான் இந்த சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை செய்த ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், மாணவனின் தந்தை தாக்கல் செய்த ஆரம்ப புகாரில் கபடி போட்டியே தாக்குதலுக்கான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்ட 3 சிறார்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மூவரில் ஒருவரின் சகோதரியுடன் பட்யடில் சமூக மாணவர் காதல் உறவில் இருந்தது தெரிந்தவுடன் தான் இந்த வன்முறை உருவானது என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments