Sunday, June 15, 2025
Google search engine
HomeIndiaகச்சத்தீவு வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடக்கம்

கச்சத்தீவு வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடக்கம்

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

1974-ம் ஆண்டு மத்திய அரசு, தமிழ்நாட்டின் உரிமையுடைய கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் தாரைவார்த்தது. இதன் காரணமாக, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை செல்லாததாக அறிவிக்க கோரி, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2020-ம் ஆண்டில் விசாரணை நடைபெற்ற பின்னர், வழக்கு 5 ஆண்டுகளுக்கு கிடப்பில் வைக்கப்பட்டது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மரணத்தையடுத்து, அவரின் பெயரில் தொடரப்பட்ட வழக்கில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை மனுதாரராக சேர்க்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த வழக்கு தமிழக மீனவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியமான தீர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments