பப்புவா நியூ கினியாவில் முகநூல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகநூலில் வெறுப்புரை, போலி செய்திகள், மற்றும் ஆபாசப் புகைப்படங்கள் அதிகம் பரவுவதால், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்நாட்டில் 1.3 மில்லியன் மக்கள் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர்.
சிறு தொழில்கள், வர்த்தகங்கள் போன்றவை முகநூலின் மூலம் வளர்ச்சி அடைந்த நிலையில், இந்த தடை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முகநூல் முடக்கம் குறித்து எதிர்க்கட்சியினர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இது மனித உரிமை மீறல், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்க முயலும் ஒரு நடவடிக்கை என கருத்து தொிவித்துள்ளனர்.
இந்நிலையில் VPN-களை பயன்படுத்தி சிலர் முகநூலை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டிலும், இதேபோன்று போலி கணக்குகளை நீக்கும் முயற்சியில் ஒரு மாத காலத்துக்கு முன் முகநூல் இவ்வாறு முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.