ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்மநபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றே தீர வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு தனது கண்டணத்தையும் வெளியிட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி, அவரது வீட்டில் சாக்கடை நீர் ஊற்றி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனா்.
இந்நிலையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவித்துள்ளாதவது,
ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் தாயார் தனியாக வீட்டில் இருந்த போது, 50 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவரின் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சாக்கடை நீரை ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த செயல் ஜனநாயக அடிப்படைகளுக்கு எதிரானது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றே தீர வேண்டும்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.