அண்மையில் இடம்பெற்ற தேர்ததைலையடுத்து தென்னிலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவல் இந்த சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
இதன்படி எதிர்வரும் சில வாரங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தில் முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
கடந்த கோட்டாபய ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த உரம் மோசடி தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தின் இளம் அரசியல்வாதியான சஷீந்திர ராஜபக்சவை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிய வருகின்றது.
அதே போன்று அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.