நாட்டு மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம் எனவும் அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தொிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளாா்.
அங்கு மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த பிரதி அமைச்சர்
நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
இது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது. ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் இதன்போது மேலும் தொிவித்துள்ளார்.