Sunday, June 15, 2025
Google search engine
HomeIndiaபஹல்காம் தாக்குதல் குறித்து மோடிக்கு முன்பே தகவல்? கார்கேவின் குற்றச்சாட்டு

பஹல்காம் தாக்குதல் குறித்து மோடிக்கு முன்பே தகவல்? கார்கேவின் குற்றச்சாட்டு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் மூன்று நாட்களுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்திருந்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தாக்குதலுக்கான உளவுத்தகவலை பிரதமர் மோடி அறிந்திருந்த போதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. மேலும் அவருக்காக திட்டமிடப்பட்ட பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பிரதமர் மோடி அவருடைய உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.எதற்காக காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக எப்போதும் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments