அமெரிக்க படையினர், ஹவுதி இயக்கத்தின் முக்கிய தளபதிகள் மற்றும் உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக ஹவுதி அமைப்பினர் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதுடன் ஏவுகணை தாக்குதல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கியுள்ள அமெரிக்கா ஹவுதி அமைப்பின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையிலேயே மேற்குறித்த திடீர் தாக்குதல் ஒன்று ஹவுதி அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதி அமைப்பின் தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த அதிரடி தாக்குதலில், ஹவுதி அமைப்பின் தகவல் தொடர்பு அமைப்புகள், ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய ஆயுதங்கள் என பல அடியொடியில் அழிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், ஹவுதிகள் வணிகக் கப்பல்களைத் தாக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகளின் பதிலடி நடவடிக்கையாக இடம்பெற்றுள்ளன.