ஜனாதிபதி ட்ரம்ப் பிறப்பித்த கடுமையான வரி விதிப்புகள், அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) 1977-ல் கொண்டுவரப்பட்டது என்றாலும், அதைப் பயன்படுத்தி தனிநாடுகளுக்கு வரி விதிப்பது ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளைச் சரிபார்க்கும் செயல்முறைகள் தடைபட்டுள்ளன. ட்ரம்ப் நிர்வாகம் இந்த முடிவுக்கு மேல்முறையீடு செய்துள்ளது.
ட்ரம்பின் அதிரடி அறிவிப்புக்கள்
கடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து சர்ச்சைக்குறிய பல தீர்மானங்களை எடுத்ததுடன் அதிரடியான பல அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக உலக நாடுகள் ட்ரம்ப் மீது பெரும் அதிருப்தியில் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி ட்ரம்ப் கடுமையான வரிகளை அறிவித்ததிலிருந்து, வெள்ளை மாளிகை வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நீதிமன்றத்தின் மேற்குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. குறித்த விடயம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பதிலடியாக பார்க்கப்படுகின்றதுடன் நீதிமன்றத்தின் செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://shorturl.fm/LdPUr
https://shorturl.fm/TDuGJ