Monday, April 28, 2025
Google search engine
HomeIndiaமும்மொழி கொள்கையை ஏற்க முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒரு மொழியை திணிப்பது எங்கள் தாய் மொழியை அழிக்கக்கூடியது என்பதால், அதை அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே போதும், எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்​கொள்ள மாட்டோம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு​மொழிக் கொள்கை தொடர்​பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்​மானம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.

தாய்​மொழி​யாம் தமிழை அழிக்க நினைக்​கும் ஆதிக்க மொழி எது​வாக இருந்​தா​லும் அதை அனு​ம​திப்​ப​தில்​லை. இன்​னொரு மொழியை திணிக்க அனு​ம​தித்​தால், அது நம் மொழியை மென்று தின்று விடும் என்​பதை நாம் வரலாற்​றுப் பூர்​வ​மாக உணர்ந்​தவர்​கள் என்ற அடிப்​படை​யில்​தான் இரு​மொழிக் கொள்​கையை கடைப்பிடிக்​கிறோம்.

இரு​மொழி கொள்​கை​யில் அதி​முக உறு​தி​யாக உள்​ளது. எந்த மொழிக்​கும் எதி​ரானவர்​கள் அல்ல நாம். இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்​பவர்​கள் நாம். யார் எந்த மொழியைக் கற்​ப​தற்​கும் தடை​யாக நாம் நிற்​ப​தில்​லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments