பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடிய அனைவரையும் பாதாள உலகத்துடன் தொடர்புகள் இருப்பதாகக் கருதி அவர்களை ஒட்டுமொத்தமாகக் கைது செய்வது நியாயமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அத்தோடு, பாதுகாப்புப் படைகளில் சிலர் தவறான செயல்களைச் செய்யலாம். அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
எனினும், பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து அரசாங்கம் ஒரு பரந்த கலந்துரையாடலை நடத்த வேண்டும். அவர்களுக்கு சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அதன்படி, அத்தகைய நபர்கள் மீது அரசாங்கம் ஒரு கண்காணிப்பு செயல்முறையை உருவாக்க முடியும் என்றார்.