தமிழ்நாட்டில் உள்ள 9.3 லட்சம் அரசு ஊழியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியம் பெறும் நபர்களுக்கு 1ஆம் திகதி சம்பளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதம் சம்பளம் ஏப்ரல் 1ஆம் திகதியே கொடுக்கப்படவிருந்தது.
எனினும் ஏப்ரல் 1ஆம் தேதி ஆண்டுக் கணக்கு முடிவு காரணமாக வங்கிகள் செயல்படாமல் இருப்பதால், சம்பளமும் ஓய்வூதியமும் ஏப்ரல் 1ஆம் தேதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் ஏப்ரல் 2 ஆம் திகதி குறித்த சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியம் பெறும் நபர்களை பொறுமை காக்கும் படியும் அரசு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.