ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவத்தில் 26 பேரின் உயிரிழப்பு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இத்தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல பயங்கரவாத முகாம்களைத் தாக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அரசு பெயரிட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது, பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம், லஷ்கர்-இ-தொய்பாவின் முகாம்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த தாக்குதலின் போது, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்திருந்த மசூத் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு வெளியாகவில்லை. அவருடன் அவரது குடும்பத்தினரும் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை நசுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை பாராட்டப்படுகின்றது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எண்ணமோடு இந்திய அரசு செயல்படுவதை காட்டுகிறது.
இதேவேளை மசூத் அசார், 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.