பிாிட்டனில் வானத்தில் தோன்றிய ஓளிவட்டம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது இது வேற்றுகிரகவாசிகளின் செயல் அல்ல என்றும் விஞ்ஞானிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பிரிட்டனின் மாண்ட்செஸ்டர், டெர்பிஷைர், யார்க்ஷையர் போன்ற இடங்களில் வானத்தில் மர்மமான ஒளிவட்டம் தோன்றியதை அவதானித்த பொதுமக்கள், அதை வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் (UFO) எனக் கருதினர்.
வானில் மெதுவாக நகர்ந்து மறைந்த இந்த ஒளிப்படலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையிலேயே விஞ்ஞானிகளின் மேற்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வேற்றுகிரகவாசிகளின் செயல் அல்ல. அமெரிக்க விண்வெளித் திட்டமான SpaceX Falcon 9 ராக்கெட் ஏவுதலின் போது வெளியான எரிபொருள் உறைந்து, சூரிய ஒளியை பிரதிபலித்ததால், வானில் இந்த ஒளிவட்டம் தோன்றியது என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.