போருக்கு தீர்வு காணுங்கள் இல்லையேல், சிறைபிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் உறுப்பினர்களை, பிணமாகப் பார்க்க வேண்டிய சூழல் உருவாகலாம் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணொளி மூலம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்தக் கோரி ஹமாஸ் அமைப்பு வலியுறுத்திய போதும் குறித்த தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை.
குறித்த தாக்குதல் நடவடிக்கைகளால், கடந்த சில மாதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்துவிட்டது.
இந்நிலையில், ஹமாஸ்அமைப்பு இஸ்ரேல் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் வெளியிட்ட காணொளியில்,
இஸ்ரேலியப் பணயக் கைதிகள் எல்கானா போஹ்போட் மற்றும் யோசேஃப்-ஹைம் ஒஹானா ஆகியோர் அடக்குமுறையை எதிர்கொண்டு வருவதாகக் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் நேரம் விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது, போருக்குத் தீர்வு காணுங்கள் என இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை மட்டுமே உங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்து வர வழிவகை செய்யும் எனவும் குறித்த காணொளி மூலம் ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.