அமெரிக்கா, ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளாா்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நோக்கத்திலிருந்து விலக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகம் தெளிவாகக் காணும் வகையில், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை நிறுத்த வேண்டும். இது ஈரானுக்கு இறுதித் தருணம், எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய நாட்களாக ஈரான் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.