பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் தாக்குதலால் எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதன் விளைவாக, தர்மசாலாவில் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தொிவித்துள்ளது.
இதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டியும், வரும் 11ஆம் திகதி தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.