Sunday, June 15, 2025
Google search engine
HomeNewsஅமைச்சுக்கள், அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அமைச்சுக்கள், அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கு இடையூறாக அமையலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகையால் தேர்தலின் போது எடுக்கும் முடிவுகளை தமக்கு அறிவிக்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தொிவித்திருப்பதாவது,

அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் எடுக்கப்படும் முடிவுகள் தேர்தர் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் சில அமைச்சுகள் சில முடிவுகளை எடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பின்னர் அது குறித்து ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு குறித்த முடிவுகளால் ஏற்பட்ட தவறுகளை திருத்தியதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் எடுக்கப்படும் சில முடிவுகள் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலுக்கு இடையூறாக அமையலாம் என்பதால் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதுடன் இது தொடர்பில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments