Sunday, June 15, 2025
Google search engine
HomeNewsகனடா பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள்! வெளியான எச்சரிக்கை

கனடா பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள்! வெளியான எச்சரிக்கை

கனடாவில் பொது தோ்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தோ்தலில் உலக நாடுகள் தலையிடும் வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை கனடாவின் பாதுகாப்பு உளவுப் பிரிவு துணை இயக்குநர் வனெஸ்ஸா லொய்ட் வெளியிட்டுள்ளாா்.

இதன்படி குறித்த தேர்தலில் இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலையிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் ஆளும் கட்சியில் ஏற்பட்ட உள்தள பிரச்சினைகள் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, மார்க் கார்னி புதிய லிபரல் கட்சித் தலைவராகவும், கனடாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவா் நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்த பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையிலேயே மேற்குறித்த எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவியியல் அரசியலில் தனது தாக்கத்தை நிலைநிறுத்த, இந்தியா தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடும் திறன் மற்றும் நோக்கம் கொண்டதாக உள்ளது.

அதேபோல், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் ஆதரவு பிரச்சாரம் நடத்த சீனா முனைகிறது.

ரஷ்யா மற்றும் பாகிஸ்தானும் இணைய வழியாகத் தேர்தல் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. ஆகவே கனடாவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் மிகவும் சிக்கலுக்குரியதாக அமைந்துள்ளது எனவும் அவா் மேலும் தொிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments