பிரிட்டனில் ஏப்ரல் 2025 முதல் வேலைசார் சட்டங்களில் முக்கியமான மாற்றங்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மாற்றங்களில், ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி விடுப்பு சம்பள உயர்வு, மற்றும் புதிய விடுப்புச் சட்டங்கள் என்பன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய வாழ்வாதார ஊதியம் £11.44 இலிருந்து £12.21 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும், இது முழு நேர ஊழியர்களுக்கு வருடத்திற்கு கூடுதலாக £1,400 வருமானமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 20 வயது வரையிலான இளைய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் £8.60 இலிருந்து £10.00 ஆக உயர்கிறது.
மேலும், மாணவர் வேலைப்பயிற்சியாளர்களுக்கான (Apprentice) ஊதியம் £6.40 இலிருந்து £7.55 ஆக அதிகரிக்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து மாற்றங்களும் ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.