Sunday, June 15, 2025
Google search engine
HomeWorld300 பேருக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 20 ஆண்டு சிறை

300 பேருக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 20 ஆண்டு சிறை

பிரான்சில், Joël Le Scouarnec எனும் 74 வயதான சத்திர சிகிச்சை நிபுணர், 1990-2017 காலப்பகுதியில் சுமார் 300 பேருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு அவர் மீது 6 வயது சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு பொலிஸாரினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

பாலியல் துஷ்பிரயோகம்

இந்நிலையில் குறித்த விசாரணைகளின் போது, அவரது வீட்டில் 3,00,000 புகைப்படங்கள், 650 ஆபாச வீடியோக்கள், மற்றும் அவரது கைஎழுத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவரினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளில் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார்.

மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண் மற்றும் 141 பெண் உட்பட ஏராளமான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது உலகளவில் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Joël Le Scouarnec எனும் 74 வயதான சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments