Sunday, June 15, 2025
Google search engine
HomeIndiaசட்டவிரோதமாக குடியேறிய 27 பேர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக குடியேறிய 27 பேர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக குடியேறிய மக்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் தற்போது இந்திய அரசு மும்முரம் காட்டி வருகின்றது.

இதன்படி, மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது.

மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அண்டை நாடான மியான்மாரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மாநில அரசு இவர்களை கைது செய்து தடுப்புக் காவல் மையங்களில் வைத்திருந்தது.

இந்நிலையில், தண்டனை காலம் முடிந்துள்ள 27 பேர், இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில், இந்திய-மியான்மார் நட்புறவு வாயிலின் மூலம் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments