பிரிட்டன், முன்பு அறிவித்திருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டமொன்றை செயல்படுத்த உள்ளது.
முந்தைய அரசு சிறிய படகுகளின் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.
ஆனால், தற்போதைய அரசு, அந்த திட்டத்தை மாற்றி, மேற்கு பால்கன் நாடுகளான அல்பேனியா, செர்பியா, மற்றும் போஸ்னியா போன்ற இடங்களுக்கே புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை அனுப்பவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடுகளும் தோல்வியடையும் பட்சத்தில் அத்தகையோரை இவ்வாறு நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இந்த புதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.