இந்தியா – இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சோன்சின் அங்மோ என்ற வரலாற்று சாதனையொன்றை படைத்துள்ளார்.
இதன்படி குறித்த பெண் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்து சாதனை படைத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இச்சாதனையைப் படைத்த 5 ஆவது நபர் இவர் ஆவார்.

பார்வையற்ற பெண்ணின் சாதனை
அடிப்படையில் மலையேறும் பயிற்சியை முடித்த இவர் இதற்கு முன்னதாக லடாக்கில் பல மலைகளை ஏறியுள்ளார்.
சோன்சின் அங்மோ, மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கமும், தேசிய அளவிலான மரதன் போட்டியில் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
பார்வையில்லாமல் இருப்பது எனது பலவீனமல்ல. அதுதான் எனது பலமே என சோன்சின் அங்மோ மனம் நெகிழ கூறியுள்ளார்.
https://shorturl.fm/VeYJe