Sunday, June 15, 2025
Google search engine
HomeNewsபள்ளிவாசல் மீது தாக்குதல்! பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு

பள்ளிவாசல் மீது தாக்குதல்! பொதுமக்கள் 5 பேர் உயிரிழப்பு

சூடானில், தலைநகர் கார்டூமில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது துணை இராணுவப்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கார்டூமின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டில் கொள்ள, அரசுப்படை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினருக்கு இடையே கடுமையான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2021ம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குப்பின், சூடானில் அரசியல் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி, அரசுப் படைகள் மற்றும் அதிவிரைவு ஆதரவு படைகள் (RSF) இடையே பயங்கர மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

குறித்த மோதலினால் தொடர் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் பொதுமக்களின் உயிர்கள் அநியாயமாக பலியாகி வருகின்றது.

இந்த மோதல்கள் முடிவுக்கு வருமா என்பது குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ள நிலையில் உலக நாடுகள் தமது கண்டணத்தையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments