Sunday, June 15, 2025
Google search engine
HomeNewsமக்களே அவதானம்! கல்வியமைச்சு அறிவிப்பு!

மக்களே அவதானம்! கல்வியமைச்சு அறிவிப்பு!

போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி போலி அறிவிப்பு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற நிலையிலேயே கல்வியமைச்சு மேற்குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி பரவி வரும் குறித்த போலி அறிவிப்பில்இ இந்த ஆண்டு விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்தைத் தவிர்த்துஇ கேள்விகள் தாயரிக்கப்பட்டுள்ளதாகவும்இ அதற்கு தீர்வாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 8 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் குறித்த போலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்இ ‘ஏ’ சித்திக்கான மதிப்பெண் 10 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாகவும்இ அதன்படி, 65 புள்ளிகளுக்கு மேல் பெறும் மாணவர்கள் எல்லோருக்கும் ஏ சித்தி வழங்கப்படும் என்றும் அந்த போலி அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு போலியாக தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் மட்டுமே பரப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments