Sunday, June 15, 2025
Google search engine
HomeWorldஉக்ரைன் ட்ரோன்கள் அதிரடி : அழிக்கப்பட்ட ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகள்

உக்ரைன் ட்ரோன்கள் அதிரடி : அழிக்கப்பட்ட ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகள்

உலக நாடுகள் கவனிக்கத் தக்க வகையில் உக்ரைன் தமது பாதுகாப்புத் திட்டங்களை மேலும் தீவிரமாக்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த 28 மே 2025 அன்று, ரஷ்யாவின் முக்கிய ஆயுத உற்பத்தி மையங்களை நோக்கி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் சூழ்நிலையை புதிய கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

மேற்குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட தொழிற்சாலைகள்

மாஸ்கோ அருகிலுள்ள டுப்னா நகரத்தில் செயல்படும் கிரான்ஸ்டாட் ட்ரோன் உற்பத்தி மையம்,

ரடுகா கிரூஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் தொழிற்சாலை,

ஏங்க்ஸ்டிரெம் மைக்ரோசிப் உற்பத்தி மையம் (இது ரஷ்ய இராணுவ தொழில்நுட்பத்தின் முக்கிய கூறுகளை உருவாக்குகிறது)

இவானோவோவில் உள்ள வேதியியல் வெடிகுண்டு சேர்க்கை தொழிற்சாலை

ஆகிய தொழிற்சாலைகள் மீது இந்த அதிரடித் தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆயுதமாக ட்ரோன்கள்

இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்திய உக்ரைன் ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் (SBU), ட்ரோன்கள் மட்டுமே இதில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

உக்ரைனிடம் தற்போது மிக நீள தூர ஏவுகணைகள் இல்லாததால், ட்ரோன்கள் முக்கிய ஆயுதமாக செயலில் உள்ளன.

மற்றொரு புறம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் 296 உக்ரைன் ட்ரோன்களை அழித்ததாக அறிவித்துள்ளது.

அதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, கடந்த 3 நாட்களில் ரஷ்யா 900-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் 2022ல் தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இருவரும் டிஜிட்டல் மற்றும் ட்ரோன் யுத்தம் மூலமாகவே தாக்குதல் மேற்கொள்வது அதிகரிக்கிறது. இது உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments