மதுபான விற்பனை மூன்று நாட்களுக்கு தடை செய்யப்படும் என கலால் திணைக்களத்தினால் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேற்குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், பார்கள் (BAR) மற்றும் மதுபான விடுதிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து உணவகங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களும் தங்கள் விருந்தினர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.