Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsகொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

கொழும்பு போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை பணிகள் குறித்து கொழும்பு போக்குவரத்து பிரிவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு அறிவித்துள்ளது.

2025.01.29 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.30 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.31 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.01 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.02 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ளன:

கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழையும் வீதி

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழையும் வீதி

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழையும் வீதி

கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழையும் வீதி

கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழையும் வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments